வித்தியாசமான ஹேர் ஸ்டைல்: சென்னை வந்த டோனி ; உற்சாக வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த டோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
38 வயதான டோனி, மார்ச் 19ம் தேதி வரை அவருடைய சக விளையாட்டு வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபடுவார்.
ஐ.சி.சி உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடைசியாக விளையாடினார்.
அதன்பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த டோனி, ஜனவரி மாதத்தில் பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரது புகைப்படம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
THALA DHARISANAM! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/fb7TCiuqHL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020
Related Tags :
Next Story