இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பரிந்துரை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 4 March 2020 12:38 PM GMT (Updated: 4 March 2020 12:38 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷியை நியமனம் செய்ய பிசிசிஐ-க்கான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது.

மும்பை

இந்திய  கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வீரர் சுனில் ஜோஷியை நியமனம் செய்ய  மதன்லால், ஆர் பி சிங் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ-க்கான  கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது.

5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் முன்னாள் வீரர் ஹர்விந்தர் சிங்கை இடம்பெறச்செய்யவும் பரிந்துரைத்து உள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் அணியின்  தேர்வுக் குழுவின் தலைவராக  சுனில் ஜோஷியை குழு பரிந்துரைத்து உள்ளது.
கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி ஒரு வருட காலத்திற்குப் பிறகு அவர்களின் செயல்பாடுகளை  மதிப்பாய்வு செய்து பி.சி.சி.ஐ.க்கு பரிந்துரைகளை வழங்கும் என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறி உள்ளார்.

Next Story