‘விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை கொரோனாவுக்கு எதிராக செயல்படுத்துங்கள்’ - ரவிசாஸ்திரி வேண்டுகோள்


‘விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை கொரோனாவுக்கு எதிராக செயல்படுத்துங்கள்’ - ரவிசாஸ்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 April 2020 12:26 AM GMT (Updated: 16 April 2020 12:26 AM GMT)

விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம் என்று ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனாவுக்கு எதிரான போராட்டம் குறித்து நேற்று தனது டுவிட்டர் மூலம் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கொரோனா வைரஸ் இன்று நம்மை சுவருக்கு பின்னால் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறது. 

கொரோனாவுக்கு எதிரான போர் என்பது உலக கோப்பையை வெல்ல வீரர்கள் தங்களது எல்லா சக்திகளையும் வெளிப்படுத்தி இறுதி வரை போராடுவது போன்றதாகும். நம்மை உற்றுநோக்குவது (கொரோனா) சாதாரண உலக கோப்பை அல்ல. அனைத்து உலக கோப்பைகளுக்கும் தாய். இது வெறும் 11 பேர் பங்கேற்கும் விளையாட்டல்ல. இந்த போராட்ட களத்தில் 140 கோடி மக்கள் நிற்கிறார்கள். 

வாருங்கள் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட்டு மூலம் கற்ற பாடத்தை செயல்படுத்தி கொரோனாவை வீழ்த்துவோம். இந்த விஷயத்தில் பிரதமர், மத்திய-மாநில அரசுகள் மற்றும் நமக்காக உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story