டோனிக்கு நான் ஏதாவது சிறப்பு செய்ய விரும்புகிறேன் - டிவைன் பிராவோ


டோனிக்கு நான் ஏதாவது சிறப்பு செய்ய விரும்புகிறேன் - டிவைன் பிராவோ
x
தினத்தந்தி 29 April 2020 11:48 AM GMT (Updated: 29 April 2020 11:48 AM GMT)

டோனிக்கு நான் ஏதாவது சிறப்பு செய்ய விரும்புகிறேன் என டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி போல, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் டிவைன் பிராவோ விளையாடி வருகிறார். 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிய அவர்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களை குடும்ப உறுப்பினர்களை போல வரவேற்கும் தன்மை கொண்டது.

தாம் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணியை காண முடியும் என்றோ அல்லது அந்த அணியில் நிலவிய இணக்கமான சூழலை வேறு அணியில் பெற முடியும் என்றோ தாம் நினைக்கவில்லை.

டோனிக்காக நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அவர் தனது விளையாட்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்.

அவர் கிரிக்கெட் விளையாட்டில் தனது வாழ்க்கையை கழித்துள்ளார். அவர் பலருடன் சேர்ந்து எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களையும் நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் வாழ்க்கையைப் பொருத்தவரை அவரைப் புகழ்ந்து பேசுவார்கள். 

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை ஒருபோதும் நினைத்திராத பல கிரிக்கெட் வீரர்களை அவர் வழங்கி உள்ளார். எனவே அவருக்காக ஏதாவது சிறப்பு செய்ய நான் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story