இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்


இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 29 July 2020 12:34 AM GMT (Updated: 29 July 2020 12:34 AM GMT)

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.


* கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ்பட்லரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்ததால் விமர்சனங்களை சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பவுலர் பந்தை வீசும் முன்பே எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்து முன்நோக்கி செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படி செயல்பட்டு எடுக்கும் ரன்னை அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி, பவுலருக்கு ஒரு விதி என்ற பாரபட்சத்தை களைய வேண்டும்‘ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

* இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story