கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி.


கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் - ஐ.சி.சி.
x
தினத்தந்தி 30 July 2020 12:39 AM GMT (Updated: 30 July 2020 12:39 AM GMT)

கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 டெஸ்ட் தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 5-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த 14 வீரர்கள் மாற்றமின்றி அப்படியே தொடருகிறார்கள்.

* இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டிலும் ‘டாஸ்’ ஜெயித்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாதது வெஸ்ட் இண்டீசின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வால்ஷ் கூறியுள்ளார்.

* ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட 6 தொடர்கள் மீண்டும் நடத்தப்படலாம்’ என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது.

Next Story