மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’


மழையால் பாதிப்பு: இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’
x
தினத்தந்தி 18 Aug 2020 12:13 AM GMT (Updated: 18 Aug 2020 12:13 AM GMT)

இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதிய 2-வது டெஸ்ட் ‘டிரா’ வில் முடிந்தது.

சவுதம்டன்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ‘ஆல்அவுட்‘ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மழை குறுக்கிட்ட 4-வது நாளில் 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஈரப்பதம் மற்றும் மழை காரணமாக 4 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 43.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பு இல்லாததால் ‘டிரா’வில் முடித்து கொள்ள இரு அணியின் கேப்டனும் ஒப்புக்கொண்டனர். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

Next Story