கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்


கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்
x
தினத்தந்தி 20 Aug 2020 11:52 AM GMT (Updated: 20 Aug 2020 11:52 AM GMT)

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என தோனி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய தோனி,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக  கூறியுள்ளார். தோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,   வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும்,   தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது . அனைத்து விதத்திலும் நேர்த்தியான மனிதர் தோனி.  ஆட்டத்தை முடித்து வைக்கும் பாணி, அனைவரும் கவர்ந்த ஒன்று என சுட்டிக்காட்டும் மோடி, யாராலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை மறக்க முடியாது” என்று  தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்,  கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது, உழைப்புக்கான அங்கீகரிப்பதை மட்டும்தான் என்று கூறியுள்ள தோனி, அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  


Next Story