சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு


சச்சின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும்: இர்பான் பதான் கணிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2020 12:11 PM GMT (Updated: 24 Aug 2020 12:11 PM GMT)

சச்சினின் சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. சச்சினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் ( 71 சதங்கள்) உள்ளார். 

இந்த நிலையில், சச்சினின் இந்த சாதனைகளை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இர்பான் பதான்,  “ 100 சதங்கள் குறித்து விராட் கோலி சிந்திப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். 

இது குறித்து விராட் கோலி பேசாமல் இருக்கலாம். ஆனால்,. சச்சினின் இந்த சாதனைகளை முறியடிக்கக் கூடிய ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலிதான். மிக குறுகிய காலத்தில் பல சாதனைகளை விராட் கோலி நிகழ்த்தியுள்ள்ளார். சச்சினின் 100 சதம் என்ற சாதனைகளை ஒரு வீரர் முறிடியக்கிறார் என்றால் அது விராட் கோலியாக மட்டுமே இருக்க முடியும்’ என்றார். 

Next Story