ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட யுவராஜ்சிங் முடிவு


ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட யுவராஜ்சிங் முடிவு
x
தினத்தந்தி 9 Sep 2020 11:22 PM GMT (Updated: 9 Sep 2020 11:22 PM GMT)

ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட யுவராஜ்சிங் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி, 

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஹீரோவான இந்திய அதிரடி ஆல்-ரவுண்டர் 38 வயதான யுவராஜ்சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வை கைவிட்டு பஞ்சாப் அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலாளர் புனீத் பாலி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் நீண்ட யோசனைக்கு பிறகு பஞ்சாப் அணிக்காக குறைந்தது 20 ஓவர் போட்டிகளில் விளையாட அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு மறுபடியும் விளையாடுவதற்கு அனுமதிகோரி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அனுமதி கிடைத்தால் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடுவேன் என்று யுவராஜ்சிங் குறிப்பிட்டார்.

Next Story