20 -ஓவர் போட்டிகளில் புதிய சாதனை படைத்த டோனி..!


20 -ஓவர் போட்டிகளில்  புதிய சாதனை படைத்த  டோனி..!
x
தினத்தந்தி 20 Sep 2020 6:40 AM GMT (Updated: 20 Sep 2020 6:40 AM GMT)

436 நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பியது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பிறகு முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. ஏறத்தாழ 436-நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் விளையாடியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

நேற்று நடைபெற்ற போட்டியில், விக்கெட் கீப்பர் டோனி இரண்டு கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 250- பேரை ஆட்டமிழக்கச்செய்து (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். இந்தப்பட்டியலில் 238-விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் இரண்டாவது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 214-பேரை ஆட்டமிழக்கச்செய்து 3-வது இடத்திலும் உள்ளனர். 


Next Story