ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெற்ற டோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். பஞ்சாப் உடனான போட்டியில் பேசிய டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் தான் விளையாட இருப்பதாக தெரிவித்தார்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கபில்தேவ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் டோனி விளையாட நினைத்தால் அது தவறானதாக இருக்கும், ஒவ்வொரு ஆண்டு மட்டும் விளையாடினால் அவரால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது” என்றார்.
Related Tags :
Next Story