பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - அரையிறுதியில் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி


பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் -  அரையிறுதியில் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 8 Nov 2020 8:24 AM GMT (Updated: 8 Nov 2020 8:24 AM GMT)

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.

பாரீஸ், 

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார். 

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். 

விறுவிறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் ஷிவ்ரெவ் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.   


Next Story