இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 1 Jan 2021 12:08 AM GMT (Updated: 1 Jan 2021 12:08 AM GMT)

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

மெல்போர்ன், 

கான்பெர்ரா (ஜன.22), மெல்போர்ன் (ஜன.25), ஹோபர்ட் (ஜன.28) ஆகிய நகரங்களில் இந்த ஆட்டங்கள் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததாலும், சில மாகாணங்களில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் இந்த போட்டி அடுத்த சீசன் வரை தள்ளிவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதன்படி இனி 2022-ம் ஆண்டில் தான் இந்த போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த சீசனில் இந்திய அணி வருகையின் போது கூடுதலாக மூன்று 20 ஓவர் போட்டிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறியுள்ளார். கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இந்திய பெண்கள் அணி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story