37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு


37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர்  முகமது அசாருதீனுக்கு  சேவாக் பாராட்டு
x
தினத்தந்தி 14 Jan 2021 4:48 PM GMT (Updated: 14 Jan 2021 4:48 PM GMT)

அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.

மும்பை

மும்பையில் நேற்று நடைபெற்ற முஷ்டாக் அலி டிராபியில் கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய கேரள வீரர் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்து, டி-20 போட்டிகளில் விரைவாக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை பெற்றார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீனுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.             


Next Story