வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை


வெற்றியை அதிகமாகக் கொண்டாட வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு பீட்டர்சன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2021 9:22 AM GMT (Updated: 20 Jan 2021 9:22 AM GMT)

வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம், உண்மையான அணி சில நாள்களில் இந்தியாவுக்கு வர உள்ளது என பீட்டர்சன் வேடிக்கையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாலியாக பீட்டர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டரில் கூறியதாவது: -

பல தடைகளைத் தாண்டி கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடுங்கள் இந்தியா. எனினும் உண்மையான அணி இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்களை நீங்கள் தோற்கடித்தாக வேண்டும். எச்சரிக்கையுடன் இருங்கள். அடுத்த இரு வாரங்களுக்கு அதிகமாகக் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.


Next Story