இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு


இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2021 12:47 AM GMT (Updated: 12 Feb 2021 12:47 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு.

லண்டன், 

இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து 20 ஓவர் போட்டிகள் மார்ச் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த 20 ஓவர் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் அணிக்கு திரும்புகிறார்கள். இதே போல் முதலாவது டெஸ்டுடன் தாயகம் திரும்பிய ஜோஸ் பட்லருக்கும் இடம் கிட்டியுள்ளது. பிக்பாஷ் கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்த பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹாலசுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 20 ஓவர் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் வருகிற 26-ந்தேதி இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள்.

இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, மார்க்வுட்.

Next Story