20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா


20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 13 Feb 2021 11:14 PM GMT (Updated: 13 Feb 2021 11:14 PM GMT)

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.

லாகூர், 

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், முதலாவது ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. 

Next Story