ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்?
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்க முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
புதுடெல்லி,
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை நடத்த உத்தேச அளவில் முடிவு செய்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். அடுத்த வாரம் நடக்கும் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் போட்டிக்கான இடங்கள் மற்றும் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story