இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்: பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தீவிரம் காட்டும் ஹர்திக் பாண்ட்யா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 March 2021 12:54 AM GMT (Updated: 10 March 2021 12:54 AM GMT)

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்ட்யா தீவிரம் காட்டினார்.

ஆமதாபாத், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் (மார்ச் 12, 14, 16, 18, 20) கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நாளை மறுதினம் (வெள்ளிக் கிழமை) ஆமதாபாத்தில் நடக்கிறது. 

இதையொட்டி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சு பயிற்சியிலும் தீவிரம் காட்டினார். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள், டி20 தொடரில் விளையாடினார். அதன்பின் நாடு திரும்பினார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வான இவருக்கு, லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஒவர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, தனது பயிற்சி குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட சகவீரர்கள் முன்னிலையில் பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா, பவுலிங் பயிற்சியும் மேற்கொண்ட வீடியோ இடம் பெற்றுள்ளது. 

இதனிடையே தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் நல்ல நிலையில் இருப்பதால் முதலாவது ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.




Next Story