ஐ.பி.எல். நடக்கும் போது சர்வதேச கிரிக்கெட் வேண்டாம்; பீட்டர்சன் வலியுறுத்தல்


பீட்டர்சன்
x
பீட்டர்சன்
தினத்தந்தி 2 April 2021 10:12 PM GMT (Updated: 2 April 2021 10:25 PM GMT)

இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டேவிட் மலான், ஜாசன் ராய், பேர்ஸ்டோ, கிறிஸ் ஜோர்டான், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளனர்.

இங்கிலாந்து அணி உள்ளூரில் நியூலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களை தவறவிடும் நிலையில் உள்ளனர். ஐ.பி.எல். போட்டியை கைவிட்டு தேசிய அணிக்கு உடனே திரும்ப வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தமாட்டோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் கூறியுள்ளார். இருப்பினும் சில இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். அணியா? தேசிய அணியா? என்ற தர்மசங்கடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீ்ட்டர்சன், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் மிகப்பெரிய போட்டி என்பதை கிரிக்கெட் வாரியங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த போட்டி நடக்கும் போது எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தாதீர்கள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story