ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா


ஐ.பி.எல் : பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 5:55 AM GMT (Updated: 7 April 2021 5:55 AM GMT)

பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு அதனை பின்பற்றியே அணியுடன் இணைய அனுமதி அளிக்கப்படுகிறது.  

இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தொற்று அறிகுறிகள் இல்லாதநிலையில், டேனியல் சாம்ஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த  பெங்களூரு வீரர் பட்டிக்கல் தேவ்தத் கொரோனா தொற்று குணம் அடைந்ததையடுத்து அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் சாம்ஸ் ஆல்ரவுண்டர் ஆவார்.

Next Story