கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்


கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 7 April 2021 10:51 PM GMT (Updated: 7 April 2021 10:51 PM GMT)

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை எட்டிய பஹர் ஜமான் 101 ரன்களும் (104 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் 94 ரன்களும் (82 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். கடைசி பந்தில் சதத்துக்கு சிக்சர் தேவைப்பட்ட போது பந்தை தூக்கியடித்த பாபர் அசாம் கேட்ச் ஆகிப்போனார்.

அடுத்து களம் கண்ட தென்ஆப்பிரிக்கா 128 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பின்னர் கைல் வெரைன் (62 ரன்), பெலக்வாயோ (54 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்ட போதிலும் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. அந்த அணி 49.3 ஓவர்களில் 292 ரன்னில் ஆல்-அவுட் அனது.

இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குயின்டான் டி காக், ரபடா, நோர்டியா, நிகிடி, டேவிட் மில்லர் ஆகிய முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக விலகியது தென்ஆப்பிரிக்க அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

அடுத்து பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையே 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் வருகிற 10-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.


Next Story