ஐ.பி.எல் போட்டி: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல் போட்டி: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 19 April 2021 2:26 PM GMT (Updated: 19 April 2021 2:26 PM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 4 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

1. ருத்து ராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. ஷர்துல் தாகூர், 9. தீபக் சாஹர், 10. பிராவோ, 11. அம்பதி ராயுடு, 

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

1. பட்லர், 2. மனன் வோரா, 3. சஞ்சு சாம்சன், 4. ஷிவம் டுபே, 5. டேவிட் மில்லர், 6. ரியான் பரக், 7. ராகுல் டெவாலட்டியா, 8, கிறிஸ் மோரிஸ், 9. ஜெய்தேவ் உனத்கட், 10. சேத்தன் சகாரியா, 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

Next Story