ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு


ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 11:56 PM GMT (Updated: 23 April 2021 11:56 PM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.

இதற்கிடையில் கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் சமீபத்தில் பயிற்சியை தொடங்கினார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் கடைசி கட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. சுஸ்செஸ் அணியினருடன் இணைந்து ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த வாரம் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், அவர் பிரச்சினையின்றி தொடர்ந்து பந்து வீசினால் 2 வாரத்துக்கு பிறகு களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்பதை பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story