இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்


இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்: 3-வது டி-20 ஆட்டத்திற்கான தேதி மாற்றம்
x
தினத்தந்தி 25 May 2021 5:25 PM GMT (Updated: 25 May 2021 5:25 PM GMT)

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டியின் 3-வது டி-20 ஆட்டம் ஜூலை 14-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3 டி-20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டம் ஜூன் 16 ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூன் 27-ந் தேதியும், டி20 தொடர் ஜூலை 9-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி-20 போட்டியின் 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒளிபரப்பு காரணங்களுக்காக, 3-வது ஆட்டம் ஜூலை 15 ஆம் தேதிக்குப் பதில் ஜூலை 14 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Next Story