இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது


இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வங்காளதேச அணி அபார வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 25 May 2021 11:48 PM GMT (Updated: 25 May 2021 11:48 PM GMT)

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.1 ஓவர்களில் 246 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தனது 8-வது சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 125 ரன்கள் (127 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 38 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இலங்கை 40 ஓவர்களில் 245 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேற்கொண்டு 2 ஓவர்களையும் ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கைக்கு எதிரான நேரடி போட்டித் தொடர் ஒன்றை வங்காளதேச அணி வெல்வது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story