2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி


2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி
x
தினத்தந்தி 11 July 2021 11:15 PM GMT (Updated: 11 July 2021 11:15 PM GMT)

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

ஹோவ், 

ஹோவ் நகரில் நேற்று நடந்த இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. 

இதில் முதலில் பேட் செய்த இந்தியா ஷபாலி வர்மாவின் (48 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதிரடி உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது. 

3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.

Next Story