டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையிடம் வீழ்ந்தது திண்டுக்கல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையிடம் வீழ்ந்தது திண்டுக்கல்
x
தினத்தந்தி 22 July 2021 10:38 PM GMT (Updated: 22 July 2021 10:38 PM GMT)

8 அணிகள் இடையிலான 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 18.5 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. மதுரை தரப்பில் ரோகித், ஜெகதீசன் கவுசிக் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அடுத்து களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெகதீசன் கவுசிக் 31 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Next Story