பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்


பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டது நியூசிலாந்து: அக்தர் காட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2021 4:10 PM GMT (Updated: 17 Sep 2021 4:10 PM GMT)

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டி நகரில் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட இருந்தது. 

ஆனால், போட்டி தொடங்க சில மணி நேரத்துக்கு முன் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  பாதுகாப்பு தொடர்பான அச்சம் காரணமாக தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. 

தொடரை திடீரென ரத்து செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

Next Story