ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது? சேவாக் கணிப்பு


ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது? சேவாக் கணிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 9:43 AM GMT (Updated: 19 Sep 2021 9:43 AM GMT)

ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2021 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. முதல் ஆடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்தநிலையில் ஐபிஎல் இரண்டாவது போட்டிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது:

இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. நான் ஒரு அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இதனை தான் தேர்வு செய்வேன். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், இதனால் சென்னை மற்றும் பெங்களூரு சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்” என்றார். 

Next Story