ஐ.பி.எல்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்,
டெல்லி.
டெல்லியில் படர்பூரில் உள்ள மோலர்பாண்ட் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு குடியிருப்பில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு மடிக்கணினிகள், 13 மொபைல் போன்கள், ஒரு தொலைக்காட்சி பெட்டி மற்றும் ரூ.52,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story