அடுத்த 5 ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிப்போம் தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் கருத்து


அடுத்த 5 ஆட்டங்களில்  வெற்றி பெற முயற்சிப்போம் தோல்வி குறித்து  பஞ்சாப்  கேப்டன் கே எல் ராகுல் கருத்து
x
தினத்தந்தி 23 Sep 2021 5:28 AM GMT (Updated: 23 Sep 2021 5:28 AM GMT)

பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில் . கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது

துபாய் 

ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற்று வரும் ஐபிஎல்  தொடரின் நேற்று நடைபெற்ற 32 வது  லீக் போட்டியில்  கே எல் ராகுல் தலைமையிலான  பஞ்சாப்   கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்  மோதின . இந்த பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  20 ஓவர்கள்  முடிவில்  185 ரன்கள்  குவித்து ஆல் அவுட் ஆனது.  ஜெய்ஷ்வால் 36 பந்தில் 49 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மகிபால் லோம் ரோர் 17 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), லீவிஸ் 21 பந்தில் 36 ரன்னும் (7 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர்.  பஞ்சாப்  அணி சார்பில்  அர்ஷ்தீப்சிங் 5 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

 பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள்   எடுத்து  தோல்வியை தழுவியது . இதனால்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்னில் வெற்றி பெற்றது.

பஞ்சாப்  அணியின் மயங்க் அகர்வால் 43 பந்தில் 67 ரன்னும் (7பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 33 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 22 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டும், சஹாரியா, ராகுல் திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

 பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில்  . கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் பஞ்சாப்  அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது . கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 4  ரன்கள் தேவைப்பட்டது.  இந்த ஓவரை  சிறப்பாக வீசிய   கார்த்திக் தியாகி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி ஒரு ரன்  மட்டும் கொடுத்தார் .இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது .

இந்த தோல்வி குறித்து பஞ்சாப்  அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் 5 ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். சிறப்பாக ஆடியும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. சமி மற்றும்  அர்ஷ்தீப்  சிங்  சிறப்பாக பந்து வீசினார்கள் .

இவ்வாறு ராகுல் கூறினார்.


Next Story