இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவலில் இன்று தொடங்கியது .
ஓவல் (ஆஸ்திரேலியா )
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் இன்று தொடங்கியது .
டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன் படி முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர் . அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்த போது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் .
இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது . இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டுள்ளது .
இந்திய அணியின் சார்பில் சிறப்பாக விளையாடிய மந்தனா அரைசதம் அடித்து 80 ரன்களிலும், பூனம் ரவுத் 16 ரன்களிலும் களத்தில் இருந்தனர் .
Related Tags :
Next Story