போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர்


போட்டியை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்-ஹெட்மையர்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:22 AM GMT (Updated: 5 Oct 2021 7:22 AM GMT)

போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைப்பதற்காகத் தான் நான் சம்பளம் வாங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷிம்ரோன் ஹெட்மையர் நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் 18 பந்துகளில்  28 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார்.

நேற்றைய போட்டியில் வெற்றி அடைந்த பின் அவர் அளித்த பேட்டியில், “போட்டியை கடைசி வரை நின்று  வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும், இதற்காக தான் எனக்கு சம்பளம் தருகிறார்கள். முடிந்தவரை அணியை வெற்றி பெற வைக்க முயற்சி செய்கிறேன். நான் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் விட்டதற்கு நன்றி. பந்தை பேட்டிற்கு நன்கு வரவிட்டு அடிக்க வேண்டும். 19-வது ஓவர் மிக முக்கியமானதாக அமைந்தது. அந்த ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சி செய்தேன். பிராவோவுக்கு எதிராக அதிக பந்துகளை சி.பி.எல் லீக் தொடரில் சந்தித்தது இந்த போட்டியில் உதவிகரமாக இருந்தது”. இவ்வாறு கூறினார்.  

டெல்லி அணி அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை துபாயில் வைத்து எதிர்கொள்கிறது.  


Next Story