டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள்! ரோகித் சர்மா சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா .
ஷார்ஜா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது .
மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து (50) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ் அடித்தார் .இந்த சிக்சினால் 20 ஓவர் கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் .
Related Tags :
Next Story