ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதலாவதாக பேட்டிங்


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதலாவதாக பேட்டிங்
x
தினத்தந்தி 7 Oct 2021 10:32 AM GMT (Updated: 7 Oct 2021 10:32 AM GMT)

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

துபாய்,

ஐ.பி.எல். கிரிகெட்டின் 53-வது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை அடைந்துவிட்ட சென்னை அணிக்கு (9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி) இதுவே கடைசி லீக் போட்டியாகும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. சென்னை அணியை பொறுத்தவரை, புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. 

இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள விரர்களின் பட்டியல் வருமாறு;-

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டு ப்ளெஸிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

பஞ்சாப் கிங்ஸ் அணி - கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ரம், சர்பராஸ் கான், ஷாருக் கான், ஹென்றிக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

Next Story