20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு
சோகைப் மசூத் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரராக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற சோகைப் மசூத் காயம் காரணமாக விலகியுள்ளார் .
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் கடந்த அக்டோபர் 6ல் நடைபெற்ற போட்டியில் விளையாடிய சோகைப் மசூத் காயம் அடைந்ததால் . உலகக்கோப்பை அணியிலிருந்து விலகுகிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .
மேலும் அவருக்கு பதிலாக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது .
Related Tags :
Next Story