தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிராவோ!


தனது பாடலுக்கு ஆதரவளித்த  இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த  பிராவோ!
x
தினத்தந்தி 9 Oct 2021 6:21 PM GMT (Updated: 9 Oct 2021 6:21 PM GMT)

பிராவோ தனது பாடலுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ.  ஆல்-ரவுண்டராக வலம் வரும் இவர் ஐ.பி.எல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். மைதானத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் இவர், விக்கெட் எடுத்த பிறகு மைதானத்திலேயே நடனமாடியும் தனது ரசிகர்களை மகிழ்விப்பார். மைதானதில் மட்டும்  தனது திறமையை வெளிப்படுத்தாமல் சிறந்த பாடல்கள் பாடியும் தனது மற்றொரு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 

இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த  டி 20 உலகக் கோப்பையின் போது தனது முதல் பாடலான 'சாம்பியன்' என்ற பாடலை வெளியிட்டார். அது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் பல வெற்றிப் பாடல்களை தானே பாடி வெளியிட்டார். குறிப்பாக இவரது பாடலுக்கு இந்திய ரசிகர்கள் அதிகம் உள்ளனர். 

ஒரு நேர்க்காணலின் போது பேசிய அவர், தனது பாடல்களை இந்திய ரசிகர்களே அதிகம் பார்க்கின்றனர்.  இந்தியாவில் தான் பாடிய  அனைத்து பாடல்களும் மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தனது பாடல்கள் அனைத்தையும் வரவேற்கும் இந்திய ரசிகர்களுக்கு பிராவோ நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அவர், கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை கட்டுக்குள் வந்தவுடன் இந்தியாவிற்கு வர விருப்பம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story