3-வது 20ஓவர் போட்டி: இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி


3-வது 20ஓவர் போட்டி: இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி  வெற்றி
x
தினத்தந்தி 10 Oct 2021 11:56 AM GMT (Updated: 10 Oct 2021 11:56 AM GMT)

இன்று நடந்த 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

ஓவல்  ( ஆஸ்திரேலியா )

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

  2 -வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது  இந்நிலையில்  இன்று 3 வது  20 ஓவர் போட்டி நடைபெற்றது  இதில் டாஸ்  வென்ற இந்திய  அணி  கேப்டன்  ஹர்மன்பிரீத் கவுர்  பந்துவீச்சை   தேர்வு செய்தார் .

அதன் படி முதலில் களம்  இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20  ஓவர்கள்  முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக  பெத் மூனி   அதிரடியாகி விளையாடி 43 பந்துகளில்  61 ரன்களும் , தஹ்லா  மெக்ராத் 31 பந்துகளில் 44 ரன்களும்  எடுத்தனர். 

 இதனை தொடர்ந்து 150  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய இந்திய  பெண்கள்  அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து135 ரன்கள் எடுத்து  தோல்வி அடைந்தது .இந்திய  அணியில்  அதிகபட்சமாக மந்தனா   49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.  

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட 20ஓவர் தொடரில் 2-0 என   
ஆஸ்திரேலியா தொடரை  கைப்பற்றியது .

Next Story