ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா? டி 20 அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை


ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா? டி 20 அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை
x
தினத்தந்தி 10 Oct 2021 11:42 PM GMT (Updated: 10 Oct 2021 11:42 PM GMT)

டி 20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது இன்னும் முடிவாகாத நிலையில் அக்டோபர் 15 க்குள் அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

துபாய்,

டி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் வருகிற 17-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்  டி 20  ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி பிரச்சினையால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசவில்லை.  

அவரையும் சேர்த்து இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாண்ட்யாவால் பந்து வீச இயலாத பட்சத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் பற்றாக்குறையாகி விடும் நிலைமை உள்ளது. 

இந்திய அணி உலக கோப்பை போட்டியில் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் ஆடுவதால், அணியில் மாற்றம் செய்ய வருகிற 15-ந்தேதி வரை அவகாசம் உண்டு என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அணியில் மாற்றம் செய்வது குறித்து சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, இந்திய உலகக் கோப்பை அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்குர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Next Story