நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம்


நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம்
x
தினத்தந்தி 16 Oct 2021 10:10 AM GMT (Updated: 16 Oct 2021 12:15 PM GMT)

நாங்கள் துபாயில் விளையாடினாலும் சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில்   நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனால்  கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பிறகு  ரசிகர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு  சென்னை அணி கேப்டன் டோனி  கூறியதாவது :

நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. 

நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டோனி கூறினார்.

Next Story