இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றால்! மைக்கேல் வாகன் கருத்து:
இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பது குறித்து மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன்,
தற்போது நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனை பி.சி.சி.ஐ இன்னும் உறுதிபடுத்தாத நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் டிராவிட் இந்திய பயிற்சியாளராக பதவி வகிப்பது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இந்திய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பு வகிப்பது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பது உண்மையாக இருந்தால், மற்ற அணிகள் அனைத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story