அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்


அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்
x
தினத்தந்தி 17 Oct 2021 8:25 AM GMT (Updated: 17 Oct 2021 8:25 AM GMT)

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறுகையில், 

“ டோனி 4  ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். 9 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே, இதற்கு இணையாக செயல்படுவது எந்த கேப்டனுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கும். ரோகித் சர்மா இதற்கு இணையாக உள்ளார். ஆனால், 9 இறுதிப்போட்டிகள் விளையாட வேண்டும் என்றால் அவருக்கு இன்னும் கூடுதல் காலம் எடுக்கும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச்சிறந்தது. டோனியின் பாரம்பரியத்தை இந்திய அணியில் உள்ள எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியாது.  சென்னை அணிக்காக டோனி கண்டிப்பாக மேலும் ஒரு சீசனில்  விளையாட வேண்டும். அதன்பிறகே டோனி தனது ஓய்வு முடிவை வெளியிட வேண்டும்” என்றார். 


Next Story