கோலிக்கு வெற்றியை கொடுங்கள்: இந்திய டி20 அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை


கோலிக்கு வெற்றியை கொடுங்கள்: இந்திய டி20 அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை
x
தினத்தந்தி 17 Oct 2021 10:44 AM GMT (Updated: 17 Oct 2021 10:44 AM GMT)

20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.

துபாய்,

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய அணியானது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பின்னர் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுடன் வருகிற 24-ஆம் தேதி மோத உள்ளது.

இந்த நிலையில் 20 ஓவர்  உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.

அதாவது, 20 ஓவர்  உலகக்கோப்பையானது விராட் கோலி கேப்டனாக விளையாடும் கடைசி டி20 தொடராக உள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கேப்டன் விராட் கோலிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும். என இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், தற்போதய இந்திய அணியானது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சரியான கலவையுடன் இருப்பதால், எந்த அணியையும் இந்திய அணியால் வீழ்த்த முடியும். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்த 20 ஓவர்  உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி, டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story