இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு


இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு
x
தினத்தந்தி 26 Oct 2021 9:21 PM GMT (Updated: 26 Oct 2021 9:21 PM GMT)

இந்திய வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் பாராட்டு தெரிவித்தார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கட்டித்தழுவி இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். 

அவரது செயலை வெகுவாக பாராட்டியுள்ள பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கூறுகையில், ‘தோல்வியை இந்திய கேப்டன் விராட் கோலி பரிவோடு, அருமையாக கையாண்டார். அவரது விளையாட்டு உணர்வை மதிக்கிறேன். அவர் நடந்து கொண்ட விதத்தை பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. 

இது போன்ற செயல்கள் மூலம் முன்னணி வீரர்கள் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அடுத்த போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்றால் நான் ஆச்சரியப்படமாட்டேன். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒரு முறை மோதுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story