அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் - இம்ரான் கான்


அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்  - இம்ரான் கான்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:10 PM GMT (Updated: 12 Nov 2021 10:10 PM GMT)

பாகிஸ்தான் அணியினர் அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ‘பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினருக்கு: அரை இறுதியில் தோற்றதால் எத்தகைய வேதனையில் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நானும் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இது போன்ற ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். 

ஆனால் நீங்கள் தரமான கிரிக்கெட் ஆடியதை நினைத்தும், வெற்றிகளின் போது தன்னடக்கமாக நடந்து கொண்ட விதத்தை எண்ணியும் நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story