2-வது டி20 போட்டி :பாகிஸ்தான் அணிக்கு 109 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 108 ரன்கள் எடுத்துள்ளது.
டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெறுகிறது.டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் எடுத்தது .வங்காளதேச அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹுசைன் சாண்டோ அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார் .
பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் ,ஷகீன் ஷா அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்
இதனை தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது .
Related Tags :
Next Story