எனக்கு மிகவும் நெருக்கமான இடம் சென்னை தான் :கபில் தேவ் நெகிழ்ச்சி
4-வது முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
2021 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.4 -வது முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று சி .எஸ் .கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தார்
அதன்படி முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த இந்தியா முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில் ;
உலகின் எத்தனையோ இடங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் எனக்கு மிகவும் நெருக்கமான இடம் சென்னை தான் என்று கூறினார்.
Related Tags :
Next Story