மைதானத்தில் ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..!


மைதானத்தில்  ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்ற ரசிகர்..!
x
தினத்தந்தி 20 Nov 2021 1:46 PM GMT (Updated: 20 Nov 2021 3:09 PM GMT)

ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில், பாதுகாப்பை மீறிய ரசிகர், ரோகித் சர்மாவின் கால்களைத் தொட முயன்றார்.

ராஞ்சி,

இந்திய அணி நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பை மீறி திடீரென மைதானத்திற்குள் ஓடி வந்தார்.

ரோகித் சர்மாவை நோக்கி நேரடியாக அவர் ரோகித்தின் கால்களை தொட முயன்றார். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட ரோகித், தனது கால்களை ரசிகர் தொடாதவாறு விலகி, இவ்வாறு செய்யவேண்டாம் என்று தெரிவிக்க முயன்றார்.

உடனடியாக பாதுகாப்புப்படையினர் மைதானத்திற்குள் வந்து அவரை வெளியேற்ற முயன்றனர். இதனை கண்ட அந்த ரசிகர் மைதானத்தை விட்டு ஓடிவிட்டார். சில ரசிகர்கள், தனக்கு மிகவும் பிடித்த வீரர்களை மைதானத்திற்குள் சென்று கட்டிப்பிடிப்பதும், கால்களை தொடுவதுமான செயல்களை செய்கின்றனர். கடந்த காலங்களில் டோனி போன்ற நட்சத்திர வீரர்கள் ரசிகர்களின் இதுபோன்ற அன்புத்தொல்லையை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story